Wednesday, July 28, 2010

காதலா, காமமா ?


நிஜமாகவே நான்
உன்னைக் காதலிக்கிறேனா ?

இல்லை,
செழித்து வளரும்
தளிர்களைக் காணும்
ஆட்டுக் குட்டியின் ஆசைதான்
எனதா ?

உன் விழிகள்,
உன் இதழ்கள்,
உன் கன்னங்கள்
இவை
இப்படி இல்லாதிருந்தாலும்
நான்
இப்படியே தான் இருந்திருப்பேனா ?

நான்
காதல் மயக்கத்திலா ?
இல்லை
காதல் தெளிவிலா ?

நினைவுகளாலோ
விரல்களாலோ
உன்னை
உரசிப்பார்க்காதபோதும்
எனக்குள் அணையாமல் கிடக்கிறதா
இந்த காதல் ?

இல்லை
தொடுதல் ஆசையில் தான்
தொடர்ந்து வருகிறதா ?

எப்படித் தெரிந்து கொள்வது
நிஜமாகவே நான்
உன்னைக் காதலிக்கிறேனா
என்பதை ?

நீயே சொல் பெண்ணே,
நான் மறுத்தால்
உன் இரவுகள் நொறுங்குமா ?
உன்
பகல்கள் படுகாயப் படுமா ?

(நன்றி சேவியர் )

No comments:

Post a Comment