நிஜமாகவே நான்
உன்னைக் காதலிக்கிறேனா ?
இல்லை,
செழித்து வளரும்
தளிர்களைக் காணும்
ஆட்டுக் குட்டியின் ஆசைதான்
எனதா ?
உன் விழிகள்,
உன் இதழ்கள்,
உன் கன்னங்கள்
இவை
இப்படி இல்லாதிருந்தாலும்
நான்
இப்படியே தான் இருந்திருப்பேனா ?
நான்
காதல் மயக்கத்திலா ?
இல்லை
காதல் தெளிவிலா ?
நினைவுகளாலோ
விரல்களாலோ
உன்னை
உரசிப்பார்க்காதபோதும்
எனக்குள் அணையாமல் கிடக்கிறதா
இந்த காதல் ?
இல்லை
தொடுதல் ஆசையில் தான்
தொடர்ந்து வருகிறதா ?
எப்படித் தெரிந்து கொள்வது
நிஜமாகவே நான்
உன்னைக் காதலிக்கிறேனா
என்பதை ?
நீயே சொல் பெண்ணே,
நான் மறுத்தால்
உன் இரவுகள் நொறுங்குமா ?
உன்
பகல்கள் படுகாயப் படுமா ?
(நன்றி சேவியர் )
No comments:
Post a Comment