Tuesday, August 10, 2010

முத்தங்கள் - 3


வாங்கியபின் நாணயமாக
திருப்பி கொடுக்க வேண்டும்
கடன் மட்டுமல்ல
முத்தமும் தான்!



இதழ் ஒற்றனை நம்பி
ஏமாந்தது மனம்
முத்த ஓலைக்கு
பின் போர் தொடங்கியது!



அமைதிக்கான யுத்தத்திலும்
சத்தம்எழுப்புவது
முத்தமே!



கடும்பஞ்ச
காலத்திலும்
பசியாற்ற உதவுவது
கடையிதழ் முத்தமே



தன் உயிரை
மாய்த்துக் கொண்டது
தண்டனை கொடுத்தபின்
நீதிபதி பேனா முள்
தன் கடைசி முத்தத்துடன்



கம்பனை போல
காவிய மெழுத சொன்னால்
வேறென்ன கேட்பேன் -உன்
கடையிதழ் முத்தம் தவிர



முத்தம் மறுக்க...
தூரத்தில் பறக்கும் குருவி கூட
அவளுக்கு
ஒரு சாக்காக அமையும்..?!

No comments:

Post a Comment